"உன் பிரிவின் தருணம் என்னுயிரின் மறு ஜனனம்"

Friday, March 25, 2011

♥ காதல் ♥

காதல் என்பது
துயரல்ல....
தூய நட்பு ♥ ♥


காதல் என்பது
இரு உணர்வுகளின் இடமாற்றமல்ல...
இரு உள்ளங்களின் மனமாற்றம் ♥ ♥

Thursday, March 24, 2011

பூந்தென்றலாய்....நான்

உன்னை புதரென்று எண்ணினேன்....
நான் பூமியாய் இருந்த போது!!!


உன் பாதங்கள்

என் மீது
பட்டபோதெல்லாம்
புரியாத பாலைவனமானேன்....

நீ புதரல்ல, பூவென்று அறிந்தபோது....
பூமியாய் இருந்த நான்
புவியாய் மாறிவிட்டேன்....

பூந்தென்றலாய் மாறி
உன்னை வருடுவதற்காக....


பிரிவு.......



பிரிவென்பது

நிரந்தரமல்ல

நீ
என்னை

பிரிகின்ற
போது......



பிரிவென்பது

நிரந்தரமாகும்


உன்
நினைவுகள்

என்னை


பிரிகின்ற
போது......

Saturday, December 4, 2010

எப்பொழுது தாயே!

என் தேகமெல்லாம்
உன் சேவையே..

என் சேயாய்
உன் தேகம் 
தொடு(ழு)வது
எப்பொழுது
தாயே!
 *
 *

ஏனடா??

மௌனச் சிறையுற்ற
என்னை
உன் அன்புக்கணைகளைத்
தொடுத்து
உன் மனச்சிறையில்
ஏற்றியது ஏனடா..
தோழியாய் 
இருந்தவளைத்
துணைவியாய் 
மாற்றவோ?
*
*